மூன்றாவது முறையாக பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை உயிரோடு எரித்துக்கொலை செய்த கணவன்.

0

மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. குந்த்லிக் காலே (32) என்பவரின் மனைவி மெய்னா, மூன்றாவது பெண் குழந்தைக்கு பிறந்ததுக்குப் பிறகு, கணவனின் ஆத்திரத்துக்கு ஆளானார்.

குழந்தையின் பிறப்பை தொடர்ந்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை இரவு, வாக்குவாதம் அதிகரிக்க, குந்த்லிக் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். மெய்னா தீயினால் அலறியபடி வெளியே ஓடினாலும், அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

மெய்னாவின் சகோதரியின் புகாரின் பேரில், போலீசார் குந்த்லிக்கை கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.