சிங்கப்பூரில் சன்டெக் நகருக்கு அருகே பேருந்து, 2 கார்கள் மோதியதில் விபத்து!

0

சிங்கப்பூரின் பிரபலமான சன்டெக் நகருக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தும், 2 கார்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்து ஜூன் 11ஆம் தேதி மாலை சுமார் 4:20 மணியளவில் நிக்கோல் நெடுஞ்சாலை மற்றும் பிராஸ் பாசா சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.

சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் காணொளியில், விபத்துக்குள்ளான பேருந்து நடைபாதையில் தலைகீழாக நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. விபத்தில், கறுப்பு நிற காரின் பின்புறத்தில் வெள்ளை நிற கார் மோதியதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன. விபத்து நடந்த இடத்தில் கார் பாகங்கள் சிதறி கிடந்தன.

விபத்தில் சிறு காயமடைந்த 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்களும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் , பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்பதால் அவர்கள் உதவி தேவைப்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.