அங் மோ கியோவில் கார் விபத்து – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மே 9 ஆம் தேதி மாலை அங் மோ கியோவில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்து மாலை 7:25 மணியளவில் அங் மோ கியோ அவென்யூ 8 மற்றும் சென்ட்ரல் 2 சந்திப்பில் நடந்தது.
9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 30 வயதுடைய ஒரு ஆண் ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இணையத்தில் வெளியான காட்சியின்படி, ஒரு வெள்ளிநிற கார் பாதசாரிகள் நடைபாதையில் நின்றது, மற்றொரு சாம்பல் நிற கார் சாலையில் மோசமாக சேதமடைந்தது.
சிறுவர்கள் உட்பட காயமடைந்தவர்களுக்கு துணை மருத்துவர்கள் உதவுவதைக் காண முடிந்தது. அருகிலேயே ஒரு ஆம்புலன்ஸ் இருந்தது.
30 மற்றும் 41 வயதுடைய இரண்டு ஓட்டுநர்கள், விசாரணையில் போலீசாருக்கு உதவுகிறார்கள்.