உட்லேண்ட்ஸில் பஸ்-மோட்டார் சைக்கிள் விபத்து ஓட்டுநர் கைது ஒருவர் உயிரிழப்பு!
மே 9 அன்று உட்லேண்ட்ஸில் பஸ் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 36 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த விபத்து மாலை 6.25 மணியளவில் உட்லேண்ட்ஸ் அவென்யூ 12-ல், உட்லேண்ட்ஸ் அவென்யூ 10 சந்திப்புக்கு அருகே நடந்தது.
அவர் மயக்க நிலையில் இருந்ததால் உடனே கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
43 வயதுடைய பேருந்து ஓட்டுநர், மற்றவர் உயிரிழக்க காரணமான கவனக்குறைவான ஓட்டத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.