சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் பறிமுதல்!
‘அயன்’ பட பாணியில் போதைப்பொருள் கடத்த முயன்ற நபரை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இந்தோனேசிய பயணியின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.