இந்தோனேசியா அருகே பப்புவா நியூ குனினியாவில் மூர்க்கமான பழங்குடி மோதல்: 53 உயிரிழப்புகள்!

0

இந்தோனேசியா அருகே அமைந்துள்ள பப்புவா நியூ குனினியாவின் தீவில் இரண்டு பழங்குடி குழுக்களுக்கு இடையே கொடூரமான மோதல் வெடித்தது. இந்த வன்முறை மோதலில் 53 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பானிஸ் இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். “பப்புவா நியூ குனினியாவில் இருந்து வரும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன” என்று அவர் கூறினார். பப்புவா நியூ குனினியாவின் பாதுகாப்புக்கு உதவும் ஆஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். காவல்துறை பயிற்சி உட்பட பல்வேறு உதவிகளை அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

பப்புவா நியூ குனினியா தீவில் பல்வேறு பழங்குடி இனங்கள் வசிக்கின்றன. பசிபிக் பகுதியில் பல பூர்வகுடி சமூகங்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டே உள்ளன. கடந்த ஆண்டு, Enga மாகாணத்தில் இதேபோன்ற ஒரு மோதல் ஏற்பட்டது, அதில் 60 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.