சிங்கப்பூரின் மனிதநேயம் காசா மக்களுக்கு $300,000 நிதி திரட்டப்பட்டது!
காசா மக்களின் துயரங்களைப் போக்க சிங்கப்பூர் சமூகங்கள் தங்களின் மனிதநேய முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
‘ஹுயுமானிட்டி மேட்டர்ஸ்’ என்ற அரசு சாரா நிறுவனம் நடத்திய சமீபத்திய நன்கொடை சேகரிப்பில் $300,000-க்கும் மேல் நிதி திரட்டப்பட்டது.
இந்த நிதி காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் கவனிப்புப் பொதிகளை வழங்கப் பயன்படுத்தப்படும்.
பல்வேறு வர்த்தக சபைகள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்களின் ஆதரவுடன் இந்த முன்னெடுப்பு, காசா மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மீது சிங்கப்பூர் மக்கள் கொண்டுள்ள இரக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
கூடிய விரைவில் நான்கு டன் நிவாரணப் பொருட்களை ‘ஹுயுமானிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பு காசாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்களில் 5,000 குழந்தைகளுக்கான உதவிப் பொதிகள் அடங்கும்.
300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் பொதிகளைத் தயார் செய்துள்ளார்கள். பைகள், தலையணைகள் மற்றும் சிற்றுண்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குழந்தைகளுக்கான இந்தப் பொதிகளில் உள்ளன.
மேலும், காசாவில் மருத்துவம், உணவு மற்றும் நீரேற்றுதல் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுதல் பொருட்களை வாங்குவதற்காக, நிவாரணக் குழு ஒன்று அம்மான், ஜோர்டானுக்குச் செல்ல உள்ளது.