PIE நெடுஞ்சாலையில் லாரி தீ விபத்து காயமின்றி தீ கட்டுப்படுத்தப்பட்டது!
மே 7 ஆம் தேதி மாலை 7.45 மணியளவில் புக்கிட் தீமா அருகே Pan-Island விரைவு நெடுஞ்சாலையில் (PIE) ஒரு லாரி தீப்பற்றியது. இது பரபரப்பான போக்குவரத்து நேரத்தில் பெரிய நெரிசலை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து Tuas திசையில், Eng Neo Avenue விலாச்சாலை வரும் முன் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினர் (SCDF) தீயை தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இணையத்தில் பகிரப்பட்ட வீடியோக்களில், லாரியின் லாரியின் முன்பகுதி முழுவதுமாக தீப்பிடித்ததையும், காற்றில் அடர்த்தியான கரும்புகை எழுந்ததையும் காட்டியது. சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினரும், போலீசாரும் இருந்தனர்.
தீயின் காரணமாக நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் உள்ள மூன்று பாதைகளும் மூடப்பட்டன. மீதமுள்ள இரண்டு பாதைகளில் மட்டுமே வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.
நிலவரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போக்குவரத்து அதிகாரிகள், நெரிசல் Stevens Road வரை நீண்டிருந்ததாக தெரிவித்தனர்.