மலேசியா அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதியதில் மலாயா புலி உயிரிழப்பு!

0

வியாழக்கிழமை அதிகாலை 1:20 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற மலாயா புலி ஒன்று வாகனத்தால் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.

சுமார் 130 கிலோ எடையுள்ள இந்தப் புலி, பெந்தோங்கில் உள்ள புக்கிட் திங்கி வனப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். இறந்த புலியின் உடலை பஹாங் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (பெர்ஹிலிடன்) அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த இது போன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், குவா டெம்புருங் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் மற்றொரு புலி டிரெய்லரால் மோதி உயிரிழந்தது.

மார்ச் 21 அன்று, மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் ட்ராங்-பெருவாஸ் பகுதியைக் கடக்க முயன்றபோது மற்றொரு புலி கொல்லப்பட்டது.

இயற்கையின் அற்புத படைப்பான மலாயா புலிகள் தற்போது மிகவும் அரிதாகிவிட்டன. காடுகளில் 200க்கும் குறைவான புலிகளே எஞ்சியுள்ளன.

இத்தகைய விபத்துகள் அவை எதிர்கொள்ளும் ஆபத்துகளையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.