கோலாலம்பூரில் இருந்து செங்டு செல்லும் விமானத்தில் மலேசிய பெண் மயங்கி விழுந்தார்!
கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்டு நகருக்கு ஏர் ஏசியா விமானத்தில் தனியாக பயணம் செய்த மலேசிய பெண் ஒருவர், நடுவானில் மயங்கி விழுந்து உணர்விழந்தார்.
இதனால், விமானம் அவசரமாக குன்மிங் சாங்சுய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் மார்ச் 16 அன்று நடந்தது. விமானப் பணிப்பெண் ஒருவர் CPR செய்த போது, சுமார் 60 வயதுடைய பெண்ணை ஒரு ஆண் சோதனை செய்ததாக விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ உதவி கேட்டு விமான நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டது.
அவசரநிலை காரணமாக,விமானி மதியம் 1:00 மணிக்கு குன்மிங்கில் விமானத்தை தரையிறக்கினார். பெண் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், விமானம் மாலை 4:00 மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாலை 6:00 மணிக்கு செங்டுவை சென்றடைந்தது. இந்த சம்பவம் குறித்து ஏர் ஏசியா இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.