வுட்லேண்ட்ஸ் சோதனைச்சாவடியில் காரில் மறைத்து பணம் கடத்த முயன்ற நபர் கைது!
மலேசியாவைச் சேர்ந்த 54 வயது நபர், அக்டோபர் 23 அன்று வுட்லேண்ட்ஸ் சோதனைச்சாவடியில் வழியாக சிங்கப்பூருக்கு நுழையும்போது, $200,000 மதிப்புள்ள புரூனே நாணயத்தை மறைத்து கொண்டுவந்ததாக பிடிக்கப்பட்டார்.
சோதனைக்காக அதிகாரிகள் அவரது காரை விரிவாக பரிசோதித்தபோது, பணம் காரின் சீட் கீழ், பயணப்பையில் மற்றும் ஒரு பேக்க்பேக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூருக்குள் வரும்போது அல்லது வெளியே செல்லும்போது, ஒருவர் $20,000-க்கு மேல் (அல்லது அதே அளவிலான வெளிநாட்டு நாணயம்) வைத்திருந்தால் அதை அறிவிக்க வேண்டும்.
அந்த நபர் தேவையான ஆன்லைன் அறிவிப்பை செய்யவில்லை.
பயணிகள் தங்கள் வருகைக்கு 72 மணி நேரத்திற்குள் “MyICA” மொபைல் பயன்பாடு அல்லது ICA இணையதளத்தின் மூலம் இதைச் செய்யலாம்.
ஆரம்ப விசாரணையில், அந்த நபர் இந்தப் பணத்தை வேறு ஒருவருக்காக எடுத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தற்போது சிங்கப்பூர் காவல்துறைக்கு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.