அலாஸ்காவில் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்புமூன்று பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது!

0

பிப்ரவரி 7 அன்று அலாஸ்காவில் காணாமல் போன சிறிய விமானத்தின் இடிபாடுகளை அமெரிக்க கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளனர்.

செஸ்னா கேரவன் என்ற விமானத்தில் ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானி உட்பட பத்து பேர் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மூன்று பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள ஏழு பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் இருப்பதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.

விமானம் உனலக்லீட்டில் இருந்து புறப்பட்டு நோம் நோக்கி சென்று கொண்டிருந்த வேலையில் தரையிறங்குவதற்கு முன் சிறிது நேரத்தில் விமானம் உயரத்தையும் வேகத்தையும் இழந்து, ரேடாரில் இருந்து மறைந்து, பின்னர் நோமுக்கு தென்கிழக்கே 34 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அலாஸ்காவின் ஆளுநர் மைக் டன்லேவி, தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்தார். மோசமான வானிலை தேடுதலை கடினமாக்கியது.

விமானத்தில் இருந்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.