மியான்மார் தாய்லாந்து 7.7 அளவு நிலநடுக்கம் 144 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்!
வெள்ளிக்கிழமை, தென்கிழக்கு ஆசியாவை 7.7 அளவு பலமான நிலநடுக்கம் தாக்கியது. மியான்மர் முதல் தாய்லாந்து வரை பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மியான்மரின் மாண்டலேயில் உள்ள நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 600 மைல்கள் தொலைவில் உள்ள பாங்காக்கில் கூட வலுவான அதிர்வுகள் உணரப்பட்டன. இதன் விளைவாக, பாங்காக்கில் ஒரு உயர்மாடி கட்டடம் முழுமையாக இடிந்து வீழ்ந்தது.
மடிந்த கட்டிடங்களின் கீழ் சிக்கியுள்ளோரைக் காப்பாற்றும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மியான்மரில், குறைந்தது 144 பேர் உயிரிழந்துள்ளனர், 730 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளனர் என்று இராணுவ அரசு தெரிவித்துள்ளது.
பாங்காக்கில், உயர்மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர். அவசர மீட்பு பணியாளர்கள் உயிர்பிழைத்தவர்களைத் தேடும் நிலையில், 100 க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image abe news