சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டிமீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலநின்றி உயிரிழந்தார்!
சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டி
மீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டி
மீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டி
மீட்பு நடவடிக்கைக்குப் பின் 5 நாட்கள் போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
விபத்துக்குள்ளான நபரின் குடும்பத்தினர் ஆங் மோ கியோ வீடமைப்பு வளாகத்தில் மார்ச் 21 அன்று இறுதிச் சடங்குகளை நடத்தினர்.
மலேசிய ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் 15 அன்று வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
காரில் சிக்கிக் கொண்ட அவர், உடனடியாக மயக்கமடைந்தார். பொதுமக்களின் தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி நீரில் மூழ்கிய காரிலிருந்து அவரை மீட்டெடுத்தனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், அவர் சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி என்றும், விபத்து நடந்த நாளில் ஜோகூர் பாருவை நோக்கி பயணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதையும் இந்த சோகமான சம்பவம் நினைவுப்படுத்துகிறது.