சிங்கப்பூர் நிதியாண்டு வளமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலம்!

0

இந்த ஆண்டுக்கான சிங்கப்பூரின் 131.4 பில்லியன் டாலர் நிதிநிலை அறிக்கையை ஒன்பது நாட்கள் விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அவையின் தலைவர் இந்திராணி ராஜா, இந்த நிதிநிலை அறிக்கம் சவால்களை எதிர்கொள்வதிலும், வளமான, அனைவரையும் உள்ளடக்கிய, நெஞ்சுரம் மிக்க சிங்கப்பூரை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

யாரையும் விட்டுவிடாத வகையில், ஒவ்வொரு தனிநபருக்கும் உதவிகள் கிடைப்பதன் அவசியத்தையும், ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்டு கியாம், ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் தனித்தனியாக குழுக்களை அமைத்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்ய பரிந்துரைத்தார்.

ஆனால், இந்திராணி ராஜா, இது நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறலில் மேம்பாட்டிற்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், சிங்கப்பூரின் திறமையான நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய தரவரிசையை அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற சபாநாயகர் சியா கியான் பெங், இந்த நிதிநிலை அறிக்கைக்கு இரு கட்சிகளின் ஆதரவு இருப்பதை குறிப்பிட்டு, அனைத்து சிங்கப்பூரர்களுக்கான சிங்கப்பூரை உருவாக்குவதில் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.