வெள்ளம் வடிந்து வருகிறது, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்!

0

ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை தற்போது தேறிக்கொண்டு வருகிறது. வெள்ளநீர் குறைவதால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. மார்ச் 23 மதியம் 2 மணி நிலவரப்படி, இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,988 லிருந்து 1,652 ஆக குறைந்துள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 6,585 லிருந்து 5,185 ஆக சரிந்துள்ளது.

இன்னும் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன: ஜொகூர் பாரு, பொந்தியான், கோட்டா டிங்கி, கிளுவாங், மற்றும் பாது
பஹாட். வெள்ளம் வடிந்ததால், தற்காலிக புகலிட மையங்களின் எண்ணிக்கையும் 44 லிருந்து 32 ஆக குறைந்துள்ளது. ஏராளமானோர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதில், ஜொகூர் பாருவில் தான் அதிகளவிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் – 3,042 பேர் 13 புகலிட மையங்களில் தங்கியுள்ளனர்.

அரசாங்க அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், குறிப்பாக, வானிலை மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் எப்படி உள்ளது என்பதை கவனித்துவருகிறார்கள். இதுவரை உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், மக்கள் அவதானமாக இருக்கவும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Images /the star Malaysia.

Leave A Reply

Your email address will not be published.