சிங்கப்பூர் PIE பாலத்தில் இரு கார்கள் தீப்பற்றி எரிந்தன!

0

ஏப்ரல் 28 அன்று காலை, PIE பாலத்தில் இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்தன, இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

இந்த தீவிபத்து, பயா லேபர் சாலையை கடந்த பிறகு, சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் வழியில் இடம்பெற்றது.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) கூறுகையில், காலை 7.20 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு கிடைத்ததாக தெரிவித்தது. தீயணைப்புப் படையினர் தண்ணீர் மற்றும் சிறப்பு நுரை திரவத்தை பயன்படுத்தி தீயை விரைவாக அணைத்தனர்.

ஒருவர் சிறிய காயமடைந்திருந்தாலும் மருத்துவமனை செல்ல மறுத்தார். தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.