பாலியில் வேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு,ஒரு நபரைக்காணவில்லை!
இந்தோனேசியாவின் பாலி நோக்கி சென்ற வேகப் படகு ஆகஸ்ட் 5 அன்று சனூர் துறைமுகத்திற்கு அருகில் கவிழ்ந்ததில், இரண்டு சீன நாட்டவர்கள் உயிரிழந்ததையும், 23 வயதுடைய இந்தோனேசியர் ஒருவர் காணாமல் போனதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
டால்பின் II என்ற பெயருடைய இந்த படகு, நுசா பெனிடா துறைமுகத்திலிருந்து சனூர் துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பிற்பகல் 3 மணியளவில் பெரும் அலைகளால் தாக்கப்பட்டு கவிழ்ந்தது.
அந்த நேரத்தில் படகில் 80 பேர் இருந்தனர் – 73 வெளிநாட்டினர், 2 உள்ளூர் மக்கள் மற்றும் 5 பணியாளர்கள்.