உத்தரகண்ட்டில் திடீர் வெள்ளம் 4 பேர் பலி,சுமார் 100 பேரைக் காணவில்லை!
இந்தியாவின் இமயமலைப் பகுதியான உத்தரகண்ட்டில் உள்ள தராலி நகரத்தை ஆகஸ்ட் 5 அன்று ஒரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கோரமான சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 100 பேரைக் காணவில்லை.
இந்த வெள்ளம், குறுகிய மலைப் பள்ளத்தாக்கு வழியாக சேற்றையும் குப்பைகளையும் வேகமாக அடித்து வந்தது. இதனால் கட்டிடங்கள் அழிந்து, மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளம் நகரைச் சூறையாடிய காட்சிகளை வீடியோக்கள் காட்டின. பல மாடி கட்டிடங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றது. ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படைகள் உட்பட மீட்புக் குழுவினர், உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து காப்பாற்ற தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை சுமார் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், சில பகுதிகள் 15 மீட்டர் ஆழத்திற்கு சேற்றில் புதைந்துள்ளன.
நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். கனமழைக்கான எச்சரிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன.