சிங்கப்பூரில் சாலை விபத்து நான்கு பேர் காயம்!
சிங்கப்பூரின் சாங்கி சாலையில் நேற்று (மார்ச் 9) இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காலை 10:05 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.