தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்!
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் இன்று காலை 75 வயதில் காலமானார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தார்.
47 ஆண்டுகளாக திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், டப்பிங் மற்றும் எழுத்துலகம் என பல துறைகளில் முத்திரை பதித்திருந்த அவர், இன்று திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஜேஷ், 150-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழுடன் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை மட்டுமன்றி சின்னத்திரையிலும் பல முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.
அவர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞராகவும், எழுத்தாளராகவும் 9 புத்தகங்களை எழுதி உள்ளார். அண்மையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார்.
அவரது உடல் தற்போது சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவரது மறைவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ராஜேஷின் திடீர் மரணம் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.