கார் ஹார்ன் ஒலியால் பயந்த யானைகள் யானைக் கூட்டத்தின் தாக்குதலில் டொயோட்டா வாகனம் சேதம்!

0

மலேசியாவில் மே 20 அன்று கார் ஹார்ன் ஒலியால் பயந்த ஒரு காட்டு யானைக் கூட்டம் ஒரு காரை சேதப்படுத்தியது.

இந்த சம்பவம் இரவில் பெராக் மாநிலத்திலுள்ள கிரிக்-ஜேலி நெடுஞ்சாலையில் நடந்தது. யானைகள் சாலையை கடக்கும்போது ஓர் ஓட்டுநர் தனது காரை நிறுத்தி விளக்குகளை அணைத்தார். ஆனால் மற்றொரு வாகனம் ஹார்ன் ஒலிப்பதால் மூன்று யானைகள் அந்தக் காரை நோக்கி வந்தன.

அந்த ஓட்டுநர் உடனே காரில் இருந்து ஓடி தப்பியதால் காயம் ஏற்படவில்லை. ஆனால் அவரது வெள்ளை நிற டொயோட்டா வியோஸ் கார் முன்புறமும் பின்னுபுறமும் கடுமையாக சேதமடைந்தது. அவர் இதை போலீசாருக்கும் வனவிலங்கு பாதுகாப்பு துறைக்கும் புகாரளித்தார்.

சேதமடைந்த காரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
அந்தக் குழுவில் ஆறு யானைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020 முதல் 2024 வரை 66,000க்கும் மேற்பட்ட மனிதர்-விலங்கு மோதல்கள் நிகழ்ந்துள்ளதாக மற்றும் இதனால் சுமார் RM46.5 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.