பெண்ணால் காதலன் குத்திக் கொலை மலேசியாவில் பரபரப்பு!

0

மலேசியாவின் கோலா கிராய் பகுதியில், பாலியல் உறவின் போது தன் காதலனை குத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண், காய்கறி நறுக்கும் கத்தியால் அவரது வயிற்றில் மூன்று முறை குத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கோலா கிராய், மானெக் உராய், டத்தாரன் லெமாங்கில் உள்ள ஒரு பொது கழிப்பறையில் ஆண் ஒருவர் மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்தில் இரத்தம் இல்லை என்றாலும், அந்த நபருக்கு குத்து காயங்கள் இருந்ததாக கெலந்தான் காவல்துறைத் தலைவர் டத்துக் முஹமது ஜாகி ஹாரூன் தெரிவித்தார்.

குத்திக் கொல்லப்பட்ட 45 வயது நபர் மீது, அப்பெண்ணை தவறாக அடைத்து வைத்ததாக குற்றவியல் சட்டம் பிரிவு 342-ன் கீழ் வழக்கு நிலுவையில் இருந்தது.

மார்ச் 28 ஆம் தேதி, தனது காதலி எனக் கருதப்படும் அந்த சந்தேக நபரை, தெரங்கானுவின் சுங்கை டோங்கில் இருந்து கோலா கிராய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, கத்தி அவரது பெருங்குடலைத் துளைத்து, கடுமையான தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்த நபரின் குற்றப் பின்னணி மற்றும் போதைப்பொருள் தொடர்புகள் காரணமாக, இவ்வழக்கு தற்போது கொலைக்கான குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.