சிங்கப்பூர் தாம்பினைஸ் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது 4 குற்றச்சாட்டுகள்!
கவனக்குறைவான மீது தாம்பினைஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள்!
சிங்கப்பூர் தாம்பினைஸில் நடந்த பயங்கர விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவத்தில் காரோட்டி ஒருவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
42 வயதான முஹமது சியாஃபி இஸ்மாயில் மீது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு, காயங்களை ஏற்படுத்தியதோடு, விபத்துக்குப் பிறகு நிற்காமல் சென்றது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவருக்கு $30,000 பிணை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சாட்சிகளை தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆபத்தான ஓட்டுநர் செயலால் இறப்பை ஏற்படுத்தியமைக்காக எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படலாம்.
கைக் கட்டுடன் வந்த முஹம்மது, நீதிமன்ற விசாரணையின் போது அமைதியாக இருந்தார். தனக்கு வழக்கறிஞரை நியமிக்கும் எண்ணம் இருப்பதாக அவர் கூறினார்.
விமானம் ஏறி தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறிய வழக்குத் தரப்பு, முஹம்மதுக்கு மின்னணு கண்காணிப்பைக் கோரியது. ஆனால் அவர் பிணை நிபந்தனைகளை மீறாத தனது நிலைப்பாட்டை தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு முஹம்மது கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலதிக குற்றச்சாட்டுகளுக்காக போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
இந்த விபத்தில் நான்கு கார்கள், ஒரு வேன் மற்றும் ஒரு மினி பஸ் ஆகியவை மோதிக்கொண்டன. விபத்து நடந்தது ஏப்ரல் 22 ஆம் தேதி தாம்பினைஸ் அவென்யூ 1 மற்றும் தாம்பினைஸ் அவென்யூ 4 சந்திப்பு அருகே.
விபத்தில் உயிரிழந்த நோர்சிஹான் ஜுவாஹிப் (57) மற்றும் அஃபிஃபா முனிரா முஹம்மது அஸ்ரில் (17) ஆகியோரின் இறுதி அஞ்சலி ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது.
மூத்த தொழில்நுட்ப வல்லுனரான நோர்சிஹான் தனது பணிக்குச் சென்று கொண்டிருந்தார். மாணவியான அஃபிஃபா பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தார். இந்த விபத்தில் அஃபிஃபாவின் தந்தை, காவல் துறை கடலோர காவலரான முஹம்மது அஸ்ரில் என்பவரும் காயமடைந்தார்.
அவருடன் இரண்டு 11 வயது சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது நிரூபிக்கப்பட்டால், முஹம்மதுவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். விபத்துக்குப் பிறகு நிற்காமல் சென்றதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
image the straitesTimes