நியூசிலாந்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகியது!

0

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில், இன்று காலை ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சறுக்கி ஓடியது.

விமானத்தின் சக்கரம் திசை மாறிச் சென்றதால் இந்தச் சிறு விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.

விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமானத்தை நகர்த்தி, பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேறினர்.

இந்தச் சம்பவத்தால், கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும், விமான நிலையத்தின் மற்ற பகுதிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.